Sunday, March 24, 2019

கார்கடல் புரிதல்



அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இரவுப்போரின் சில அத்தியாயங்களில் பின் தங்கிவிட்டேன். காரணமின்றி நள்ளிரவு தாண்டி விழித்த ஒரு பொழுதில் மீண்டும் தூக்கம் பிடிக்காமல்வெண்முரசு வாசிக்கத்தொடங்கினேன். கார்கடல் மேலும் கருமை கொண்டஇரவுப்போரின் விரிவில் வெகுநேரம் ஆழ்ந்திருந்தேன். துருமசேனன்துச்சாதனனிடம் தான் களம் பட்ட செய்தியை கேட்பதன் மூலமே அறத்தின்
வழியை அடைய வேண்டுமென உணர்த்துமிடத்தில் நின்றுவிட்டேன்.


களம்படுவதென்பது போரில் எதிர்பார்த்துச் செல்வதென்றாலும், தன் மகன்தனக்கு முன்னே களம்படுவானென்று தெரிந்திருந்தாலும், துருமசேனன்துச்சாதனனிடம் அவன் இழைத்த கீழ்மையைச் சொல்லி தன்னறத்தைநிறுவிச்செல்லுமிடம் துச்சாதனனின் அகம் இறந்துபோகுமிடம்.இதைப்போல் அன்பு வெளிப்படும் அதே ஆழத்திலிருந்துதான் கசப்பும்வெளிப்படுகிறதென்பது எனக்கு முதலில் புரிபடவில்லை. ஆனால் பலஇடங்களில் வெண்முரசில் நீங்கள் அதை விவரித்து எழுதியிருக்கிறீர்கள்.


வாழ்க்கையில் அதை எதிர்கொண்ட தருணங்களில் முதலில் எனக்குவந்தது ‘எப்படி?’ என்ற ஆச்சரியமும் ‘ஏனென்ற’ தன்னிரக்கமும் தான்.படிக்கப்படிக்க அதன் நுட்பம் புரிந்தது. ஆம். அது அப்படியாகத்தான்இருக்கமுடியும்போலும். வானின் இருளன்றி ஒளிரும் நட்சத்திரங்களைக்காண்பது எவ்வாறு?


உள்ளாழத்திலிருந்து அந்த கசப்பையும் நீக்கிச்செல்பவன் பேரன்பு கொண்டவனாகிறான். ஒருதடவையேனும்முயன்றவன் பின்னோக்கிச் செல்வதில்லை. கண்டடையாவிடினும்
பயணத்தை முன்னோக்கித் தொடரும் மனநிலை வாய்க்கிறது.
மஹாபாரதம் முழுவதுமே ஒன்றை ஒன்று எங்கோ சமன் செய்தபடியேஇருக்கிறதென்று தோன்றியது. பல இடங்கள் மனதில் வந்தபடி இருந்தது.


யுகம் தாண்டிய தொடர்ச்சியாக நிகழ் வாழ்விலும் மனிதர்களின்
தருணங்கள் அப்படியே தொடர்வது அந்த பெருங்காவியத்தின்
அமரத்தன்மை போலும். வெண்முரசின் பிரதிபலிப்புதான் வாழ்க்கையோஎன்றே பல சமயங்களில் தோன்றுகிறது. அந்தப் புள்ளிகளைஇணைக்கும்போது கிடைக்கும் மன எழுச்சி வேறொரு உணர்வு.ஒவ்வொரு முறை அத்தகைய சூழலை திர்கொள்ளும்போதும் அதற்குஇணையாக மகாபாரதத்தின் நிகழ்வுகள் மனதில் வந்துகொண்டேஇருக்கின்றன.


சூதும் போரும் கொண்டு நிறுத்தும் பேரழிவென்பது நேரடி அறமாக
சொல்லப்பட்டாலும் மைய விசையாக அகங்காரமும் விழைவும்
செயல்பட்டு அதை மேலும் மேலும் வளர்ப்பதை போர்க்காட்சிகள்
அற்புதமாக விவரிக்கின்றன. "வேண்டற்க வென்றிடினும் சூது" என்றாலும்நெய்யூற்றி தீ வளர்க்கும் தன்மை சக மானுடரிடையே அகல்வதரிதுபோலும்.

பத்ரிநாத் கோவிலுக்குப் பின்புறம் மானா கிராமத்தில் வியாசர் குகையின்மேற்பரப்பில் அடுக்குப் பாறைகள் செறிந்த ஒரு படிமம் இருக்கும். அவர்எழுதிய ஏடுகள் பாறை அடுக்குகளாகிவிட்டன என்று அங்கிருந்த ஒருவர்சொன்னது ஒரு சுவாரஸ்யமான தொன்மம்.


சென்னை கட்டண உரையின் அரங்கில் வெண்முரசின் பல புத்தகங்களைஅடுக்காகப் பார்த்தபோது மனதில் வந்துபோனது அந்தப் பாறைப் படிமம்.வாழ்க்கையை மேலும் புரிந்துகொள்ள, நுண்ணுணர்வுகளைவளர்த்துக்கொள்ள, அகப் பயணங்களை பெருக்கிக்கொள்ள வெண்முரசின்வரிகள் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிகளை எழுதிய கரங்களை
சென்னை கட்டண உரையின்போது பற்றமுடிந்தது மிகப்பெரும் நிறைவைஅளித்தது. அந்த நிறைவைச் சுமந்த இந்த அதிகாலையில் நன்றியுடன்

நா. சந்திரசேகரன்
சென்னை.