Friday, December 14, 2018

திசைதேர்வெள்ளம்



இரண்டாம் நாள் போர் தொடங்கி பத்தாம் நாள் போர் வரை புனைவின் வழியாக இந்நாவல் காட்டிச் செல்கிறது. போர் நடப்பதை வாசிப்பது உள எழுச்சியை உருவாக்குகிறது என்றால், அந்தி முரசு ஒலித்தவுடன், ஒரு புகை மண்டலமான ஒரு உலகத்தை திசைதேர் வெள்ளம் காட்டுகிறது. அந்த இருளிலும், புகை மண்டலத்திலும், அதற்கே உரிதான வீச்சத்திலும் ஜெயமோகன் நமக்குத் காட்டித்தரும் காட்சிகள் வாசிப்பவரை ஒரு உளத் தளர்வுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. குறிப்பாக போருக்குப் பின்னர் இறந்தவர்களைச் சிதையேற்றும் காட்சி, மருத்துவ நிலைக் காட்சிகள், காளிகளும் கூளிகளும் அவ்விடத்தில் இருப்பவர்களின் மனதைப் பித்தாக்கும் காட்சிகள்…


திசைதேர்வெள்ளம் பாண்டியன் ராமையா