Monday, January 29, 2018

துரியோதனனின் முகங்கள்


அன்புள்ள ஜெ

துரியோதனன் குருதியில் மூழ்கி தன்னை முற்றாக ஒப்புக்கொடுக்கும் காட்சி இதற்கு முன்னர் வந்திருந்தது. கர்க்கரின் மாணவரான தீப்தர் காகதீத்ததின் நீர்கொண்டுவந்து அந்தச்சுனையில் ஊற்றி அதில் துரியோதனனை மூழ்கவைத்து அவனை ஆட்கொண்டிருந்த கலியை அகற்றுகிறார். அன்றைக்கு நகரில் நிறைந்திருந்த காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த நீருக்குள் விழுந்து மூழ்கி மறைந்தன. இன்று அதே காகங்கள்தான் கூட்டம் கூட்டமாக உள்ளிருந்து எழுந்து வருகின்றன

ஆனால் அன்றைக்கு நகரமே நோயுற்றிருந்தது. துரியோதனனும் நோயில் இருந்தான். அவனை நீராட்டியபோது நகரம் மீண்டுவந்தது. இப்போது இந்தக் கலிநஞ்சு மூடியபோது நகரம் உற்சாகமாக துள்ளிக்கொண்டிருக்கிறது. துரியோதனன் மாபெரும் ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான்


ஜெயராமன்