Saturday, December 5, 2015

காண்டீபம் நிறைவில்

 
 
அன்புள்ள  ஜெயமோகன்,

அற்புதம் என்பதை தவிர வேறு வார்த்தை இல்லை.  முன்பு பூரிச்ரவஸ் உடன் பயணித்தேன், பின்பு சத்தியகி மற்றும் திரிஷ்டத்யும்ணன்  உடன் பயணித்தேன், தற்போழுது அர்சுனன்னுடன். ஒவ்வொருவருடனும்  நாம் அருகில் இருக்கும் ஒரு பாத்திரமாக மாறி உடன் செல்வது  உங்கள் எழுத்தால் மட்டுமே சாத்தியம். 

சமீபத்தில் உங்கள் அறம் கதைகள் வாசித்தேன். அதில் சோற்றுக்கணக்கு, நூறு நாற்காலிகள், ஓலை சிலுவை, வணங்கான் அபாரமாக அமைந்தவை.  அவற்றின்   சிகரம் நூறு நாற்காலிகள். A real classic. I was really haunted by the story for a few days, and will remain in the mind forever.

அன்புடன்

ஸ்ரீராம்
தாம்பரம் - சென்னை