Saturday, October 17, 2015

நிருதன்

மகாபாரதக் கதையில் பெயரளவில் இடம்பெறும் கதைமாந்தர்களை மாபெரும் நாயகர்களாக வளர்த்தெடுத்து மறக்கவொண்ணா கதைமாந்தராக ஆக்குவது வெண்முரசில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விசித்திரவீரியன், பூரிசிரவஸ், சாத்யகி என பட்டியல் வளர்கிறது.  இவையல்லாமல் வெண்முரசிற்கே உரிய துணை கதாபாத்திரங்கள் – சூதர் (தீர்க்கசியாமர்) சேடி, செவிலி (மாலினி, சுபகை), காவலன் போன்றோர் – அவ்வப்போது விசுவரூபம் எடுப்பது இக்காவியத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. குஹ்யஜாதை, சித்ரகர்ணி போன்ற விலங்குகளின் பட்டியல் தனியே நீள்வது.  காவியம் என்பது ’தன்னேரில்லாத் தலைவனை உடைத்து’ என்ற இலக்கணத்தை மேலும் விரித்து சமூகவாழ்வுத்தளத்தில் எல்லா நிலைகளிலும் ஒப்பிலா நாயகர்கள் வாழ்கிறார்கள் என்பதையே இக்காவியம் மீண்டும் மீண்டும் சொல்லிச் செல்கிறது.

சீனிவாசன்  வென்முரசின் நிருதனைப்பற்றி எழுதிய கட்டுரை