வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Wednesday, October 28, 2015

அதிலும் அப்பாலும் நிற்பவள்.


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே! –அபிராமி அந்தாதி.

அன்னை பராசக்திக்கு இவ்வளவுதான் நாமங்களா? ஆயிரத்தெட்டு நாமங்களுக்கு அப்பாலும் நாமம் கொண்ட அன்னைக்கு இப்படியும் சில நாமங்கள் இருக்கு. பெயரை கேட்கும்போது சும்மா அதிற அடிக்கிறாள். ஸ்ரீமாதாவாகிய அன்னை ஏன் இப்படி அதிரடிக்கும் நாமங்களையும் கொண்டு விளையாடுகின்றாள். அன்னை முழுதானவள், முழுதாகமால் அவளால் இருக்க முடிவதில்லை. பொத்தி பொத்தி கருவளர்ப்பாள், பெற்று எடுக்கும்போதே ஒன்று இரண்டு குட்டிகளையும் தின்பாள். ஸ்ரீமாதா என்ற பெயரோடு மட்டும் அவளால் இருக்கமுடியவில்லை. மஹாக்ராஸா  மஹாசனாவாகவும் ஆகின்றாள். அண்டங்களையே பெற்று எடுப்பதுபோல அண்டங்களையே ஒரு கவளமாகவும் உண்ணுகின்றாள். நிர்அகங்காரா என்று சொல்லிக்கொள்ளும் அன்னை அதிகர்விதாவாகவும் ஆகின்றாள்.

எங்கே நிர்அகங்காராவாக இருக்கிறாள்?, எங்கே அதிகர்விதாவாக ஆகின்றாள்? என்பது எல்லாம் அவள் விளையாடும் விளையாட்டுதான். இரண்டாக நமக்குத்தெரிகிறது. ஒன்று என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். பீஷ்மகனின் ஆடைப்பற்றி விளையாட நினைக்கும் மந்தன், அண்ணனால் தள்ளப்படும்போது “நாளைக்கு நான் வளர்ந்து பெரும் புயலாக மாறுவேன்” என்று சினம்கொள்ளும்போது நிர்அகங்காரம், அதிகர்வமாக மாறுகிறது. சக்தியின் இரும்பெரும் நிலைகள் மந்தனுக்குள்  கிளைத்து விளையாடிச்செல்கிறது.

கண்டர்கள் செய்யும் முதல்போர் அதிகர்விதாவின் ஆடல் என்றால், இரண்டாவது போர் குஜ்ஜர்களின் அதிகர்விதாவின் ஆடல். முதல்போர் நடக்கும்போது நாம் குஜ்ஜர்கள் பக்கம் இருந்தால் நம்மை நிர்அகங்காரா ஆட்கொண்டு கண்டர்கள் எத்தனை கொடுமையானவர்கள் அதிகர்விதாக்கள் என்று சொல்லவைக்கிறது. இரண்டாவது போரில் நாம் கண்டர்கள் பக்கம் இருந்தால் அதே நிர்அகங்காரவால் ஆட்கொள்ளப்பட்டு குஜ்ஜர்கள் எத்தனை கொடுமையானவர்கள் அதிகர்விதாக்கள் என்று எண்ண வைக்கிறது, அன்னை நிர்அகங்காராவாகவோ அல்லது அதிகர்விதாவாகவோ இல்லை, அவள் ஸ்ரீமாதவாகவே இருக்கிறாள். தனது பிள்ளைகளின் உணவை இரண்டாக பிரிந்து விளையாடல் மூலம் கிடைக்கவைக்கிறாள். கண்டர்கள் கெட்டவர்களா? குஜ்ஜர்கள் கெட்டவர்களா? யாரும் கெட்டவர்கள் இல்லை. விளையாட்டுக்களத்தில் ஒருவன் தொட்டுவிட முயல்கிறான் ஒருவன் தொடவிடாமல் பிடித்துவிட நினைக்கிறான். ஆடு பிறக்கும்போதே ஓநாயும் பிறக்கிறது. இரண்டுக்குள்ளும் அதிகர்வமும், நிர்அகங்காரமும் இருக்கிறது. எங்கே எது மிஞ்சுகிறது என்பது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சிலநேரம் இறைவனை நல்லவர் என்று நினைக்கிறேன், சிலநேரம் இறைவனை கெட்டவர் என்று நினைக்கிறேன் என்கிறார். முதல்போரில் கண்டர்கள் குஜ்ஜர்களின் குழந்தைகளை, முதியவர்களை பெண்களை கொல்லும் கொடுமைகளைப்பார்த்து இறைவன் இத்தனை கொடுமையானவான என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை, அது பீஷ்மகனின் யதார்த்தமனா விளையாட்டு. மந்தனின் வாளோடு குஜ்ஜர்கள் கண்டர்களை முற்றும் அழிக்கும்போது இறைவன் இத்தனை கொடுமையானவான என்றுதான் நினைக்கதோன்றுகின்றது. இது மந்தன் புயலாகும் விளையாட்டு. பீஷ்மகனும் மந்தனும் அவனுக்கு அவனுக்கு உரிய விளையாட்டை விளையாடுகிறார்கள். வேடிக்கைப்பார்க்கும் நாம்தான் அது சரி இது தப்பு என்று தீர்ப்பு எழுதிக்கொண்டு இருக்கிறோம். மஹாக்ராஸாவான ஸ்ரீமாதாவின் பெரும் பசிக்கு யாரால் பெரும் கவளத்தை சமைக்கமுடியும். அவள் உருட்டும் பெரும் கவளப்பாத்திரம் அல்லவா இந்த பூமி. யார் கண்டது இதுகூட அவளுக்கு சிறு கவளமாக இருக்கலாம்.

பெரும்போரில் தப்பி உயிர்பிழைத்து, ஓநாயிடமிருந்து உயிர் காத்து. பின்பு தற்கொலைக்கு முயன்று, மீண்டு, ஊழகத்தில் அமர்ந்து, எழுந்து, படைக்கொண்டு வென்று //தன் வாளைத்தூக்கி “இனி எம்மை வெல்ல எவருமில்லை இப்புவியில்”// என்றார்.  அதிகர்வம் கொள்ளும் ரைவதகரை பார்க்கிறேன். இப்பொழுது சாருஹாஸா என்ற நாமத்தில் அன்னை புடவியை நிறைக்கிறாள்.   

நித்தியவலியும் நித்தியசுகமும் நிறைந்த உலகில் புடவியை சமைக்கும் அன்னை அதிலும் அப்பாலும் நிற்கிறாள்.  

ராமராஜன் மாணிக்கவேல்

Posted by ஜெயமோகன் at Wednesday, October 28, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Post Older Post Home

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (318)
    • ►  December (15)
    • ►  October (3)
    • ►  September (21)
    • ►  August (156)
    • ►  July (119)
    • ►  March (1)
    • ►  January (3)
  • ►  2019 (663)
    • ►  December (9)
    • ►  November (18)
    • ►  October (10)
    • ►  September (41)
    • ►  August (117)
    • ►  July (1)
    • ►  June (69)
    • ►  May (24)
    • ►  April (50)
    • ►  March (95)
    • ►  February (96)
    • ►  January (133)
  • ►  2018 (1465)
    • ►  December (88)
    • ►  November (148)
    • ►  October (124)
    • ►  September (112)
    • ►  August (107)
    • ►  July (140)
    • ►  June (136)
    • ►  May (124)
    • ►  April (148)
    • ►  March (74)
    • ►  February (129)
    • ►  January (135)
  • ►  2017 (1049)
    • ►  December (114)
    • ►  November (118)
    • ►  October (49)
    • ►  September (50)
    • ►  August (117)
    • ►  July (64)
    • ►  June (66)
    • ►  May (85)
    • ►  April (52)
    • ►  March (109)
    • ►  February (112)
    • ►  January (113)
  • ►  2016 (1269)
    • ►  December (77)
    • ►  November (146)
    • ►  October (52)
    • ►  September (109)
    • ►  August (160)
    • ►  July (151)
    • ►  June (14)
    • ►  May (26)
    • ►  April (137)
    • ►  March (104)
    • ►  February (144)
    • ►  January (149)
  • ▼  2015 (1446)
    • ►  December (127)
    • ►  November (105)
    • ▼  October (83)
      • அழகின் எதிர் நிகர்
      • மலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...
      • ஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)
      • வில்லும் அகிம்சையும்
      • தொன்மங்களின் இணைவு
      • வெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்
      • அதிலும் அப்பாலும் நிற்பவள்.
      • யானைகள்
      • போரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)
      • பிழைகள்
      • தேரோட்டி.-3
      • சாட்டையடி (காண்டீபம் 40)
      • உணர்வெழுத்து
      • குளிர்ந்தவனும் கொதிப்பவளும்.
      • மகிழ்வும் சோர்வும்:
      • பீஷ்மரின் அறம்
      • பகடை
      • ஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)
      • ஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்
      • அடுக்குகள்
      • வெண்முரசில் யோகசக்கரங்கள்
      • ஐந்துமுகத்தழல்
      • இருத்தல் எனும் இன்பம்
      • நெளிவு
      • அபிஷேக நெய் பாத்திரம்
      • மகன்
      • தேரோட்டி.-3
      • ஐந்து
      • மாயை
      • என்றும் முடியா நெடும் பயணம்
      • கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள்
      • அன்னை
      • பப்ருவாகனன்-பெயர் விளக்கம்:
      • மழைநாக்கு
      • முலைக்கண்
      • மகாவாக்கியம்
      • பொன்னில் மயங்கும் பெண்
      • ஐந்து
      • பிறவிப்பெருங்கடல்
      • நிருதன்
      • பொன்நாக விருட்சம்
      • அர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்?
      • அர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்?
      • அறிவு சிந்தனை செயலாக்கம்
      • ஞானபீடச்சக்கரம்
      • ஆசிரியரும் குருவும்
      • மாறுதல்
      • மிதந்தலைபவனின் தேடல்
      • கவசங்கள்
      • ஆசிரியன்
      • அன்பின் மொழி
      • விடுபடல்கள்
      • மிதப்பவை
      • மிதந்தலையும் தீவுகள்:
      • அழகின் அழகியல்
      • வெண்முகில்நகரம்
      • முதல்நடம் 7
      • பித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:
      • Kandeepam
      • போர்
      • பாலையின் பால்
      • கணங்களின் மாலை
      • போரில் சாதுரியம்:
      • புற்று
      • முன்னோடிகள்
      • பிரிவைத் துரத்தல்:
      • முகம் தெரியாதவர்கள்:
      • முகம்
      • அர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:
      • அசையும் உடலும் அசையா அகமும்
      • கூரிய திருப்பங்களும் வளைவுகளும்
      • எண்ணங்களை கடத்தல்
      • கதையின் தேவதை
      • அரவான்
      • காமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:
      • நெளிதல்
      • தன்னையறிதல்
      • பலிக்கொடை:
      • காதலர்களுக்கு மட்டும்
      • அடைதலும் இழத்தலும்:
      • அர்ஜுனனின் பயணம்
      • உலகு சமைத்தல்
      • புராணங்களின் ஈரேழு உலகங்கள்
    • ►  September (70)
    • ►  August (79)
    • ►  July (69)
    • ►  June (84)
    • ►  May (131)
    • ►  April (178)
    • ►  March (167)
    • ►  February (152)
    • ►  January (201)
  • ►  2014 (808)
    • ►  December (188)
    • ►  November (153)
    • ►  October (166)
    • ►  September (133)
    • ►  August (43)
    • ►  July (124)
    • ►  January (1)
Simple theme. Powered by Blogger.