Tuesday, September 19, 2017

கதைமுகம்



வணக்கம்.

இப்போது தான் எழுதழல் வாசித்து முடித்தேன். ஏற்கனவே எத்தனையோ முறை வாசித்த மகா பாரத கதை தான் ஆனால் ஏன் இதற்கு முன் அறியாத கதை போல புதிதாக உணர வைக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு சம்பவமும் விரிவாக சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம்.

துரியோதனன் பற்றிய நல்ல விடயங்கள் எனும் போது இதுவரை எனக்கு அவன் சிறந்த நண்பன் என்றது மட்டுமே. ஆனால்மிகச் சிறந்த ஆட்சியாளன் என்பதையும் அறிகிறேன்.

நன்றி

அனிதா

அன்புள்ள அனிதா
வழக்கமான கதைகள் ஒற்றைப்படையாகவே கதைமாந்தர்களைக் காட்டமுடியும். ஏனென்றால் பிரபல ஊடகம் அப்படி. ஆனால் இலக்கியம் அவர்களை முரணியக்கம் கொண்டவர்களாகவே முன்வைக்கும்

ஜெ