Thursday, September 5, 2019

காளி




ஜெ

இந்தக் கடிதப்பகுதியில் ஒரு உரையாடல் உருவாகி வருவது சிறப்பாக இருக்கிறது. வெண்முரசைப்பற்றிப் பேச உண்மையில் தளமே இல்லை என்பதே நிலைமை. நான் முதற்கனல் வாசித்தேன். அதிலுள்ள பல வரிகள் நேராக தீயின் எடையில் வந்து பொருந்திக் கொள்வதைக் கண்டேன்.


இந்த இடம்தான் முக்கியமானது. மூதன்னை அவள் காலில் விழுந்து கேட்கிறாள். ஆனால் அவள் ஓர் உறுமலோசையை மட்டுமே எழுப்புகிறாள். ஒன்றுமே சொல்லவில்லை. அப்படியே கடந்துசென்றுவிடுகிறாள். அதன்பொருள் இப்போதுதான் தெரியவருகிறது

அருண்குமார்