Monday, September 2, 2019

தொல்காப்பியம்


ஜெ

கீழ்க்கண்ட வரியை நான் முதலில் எளிமையாகக் கடந்துசென்றேன். பின்னர் அதை நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர்தான் அது தொல்காப்பிய வரியைச் சுட்டுகிறது என்று சொன்னார்

சொற்கள் பொருள்கொண்டவை. எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே என்று சொன்ன மூதாதை மானுடனுக்கு அளித்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தெய்வங்களும் அருளியதில்லை

இப்போதுகூட இதன் அர்த்தம் முழுசாகத் தெரியவில்லை. ஆனால் எல்லா சொல்லும் பொருளுடன் இருப்பதனால்தான் நாம் வாழ்கிறோம். நாம் பேசுகிறோம் என்று புரிகிறது. கடவுள்கள் மனிதனுக்கு அளித்த நம்பிக்கை அது என்பதை உள்வாங்கிக்கொள்கிறேன்

மாதவ்