Tuesday, December 8, 2020

அகழ்வு

 


ஆசிரியருக்கு,


 இன்றைய கோயிலை அகழ்வு செய்து முடித்த பின்னர் தான் திடீரெனத் தோன்றியது சில நாட்களுக்கு முன்பு கனகர் குதிரையில் இலக்கில்லாமல் சென்று கொண்டே இருந்து, பரத்தையர் தெருவுக்கு சென்று பின்னர் மீண்டது. தன்னை உள்ளுணர்வுக்கு ஒப்படைத்துவிட்டு அவர் அறியாமல் செய்த பயணம் அது.

காந்தாரி  தீர்க்கசியாமரை  தொட்டது பின்பு கண்ணிழந்த யானையை உணர்ந்து அதன் வழி சென்றது எல்லாமே உள்ளுணர்வு ஒன்று இன்னொன்றைப்  தட்டி தூண்டி எழுப்பி அதை தொடரும் அனுபவம். மிக அபாரமான அனுபவம்.

கிருஷ்ணன்