Tuesday, January 27, 2015

அஸ்தினபுரியின் அரசு


ஜெ

வெண்முரசின் அரசியல் கட்டுமானத்தைப்பற்றி வாசித்தேன். அதிலுள்ளது அரசுகள் உருவாகி வந்த காலகட்டம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் எல்லா அரசாங்கங்களையும் அரச வம்சங்களையும் பற்றிய குறிப்புகளில் நீண்ட வம்ச வரிசை உள்ளது. இந்த வம்ச வரிசை மிக முக்கியமானது. இதுதான் உண்மையில் மகாபாரதம் பொய்யல்ல, நடந்த கதை, வரலாறு என்பதற்கான ஆதாரம். இத்தனை பெரிய வம்சவலைச்சிக்கலை சும்மா உக்காந்த இடத்தில் உண்டுபண்ணிவிடமுடியாது

ராமாயணம் வேண்டுமென்றால் ஆரம்பநிலையில் இருந்த கதையாக இருக்கலாம். மகாபாரதம் நடக்கும் காலம் சத்ருக்னனின் படையெடுப்பே வரலாறாகப் பேசப்படும் காலம். ஆகவே ராமன் என்ற இலட்சிய அரசன் வந்து விட்டான். கதை அதற்குப்பிறகுதானே ஆரம்பிக்கிறது. ஆகவே மகாபாரதம் நிலைத்துப்போன பழைய அரசுமுறைகள் மாறுவதன் கதை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது

அஸ்தினபுரியின் கதை என்பது இந்த மாறிய சூழலிலே நின்று நிலைப்பதற்காக அது போராடுவதும் பாண்டவர்க்ள் என்ற யாதவகுலப்பின்னணி கொண்ட குடும்பம் அஸ்தின்புரியின் ஆட்சியை கைப்பற்றுவதற்காகப் போராடுவதும்தான். அந்த வரலாற்றையே நாம் பார்க்கவேண்டியிருக்கிறது

செம்மணி அருணாசலம்