Monday, July 7, 2014

மஞ்சல்- ராமராஜன் மாணிக்கவேல்

ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்புள்ள திரு.ஜெயமோகன் வணக்கம்.
”வெளியே பலவகையான பல்லக்குகளில் விருந்தினர் வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர்.பட்டுத்துணியாலான தொங்கும் மஞ்சல்களில் வைதிகர்களும்” என்று உள்ளது. பட்டுத்துணியாலான தொங்கும் (ஊஞ்சல்களில்) என்று இருக்கவேண்டும்.
நன்றி.
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்


அன்புள்ள மாணிக்கவேல்

மஞ்சல் என்பது ஒரு வகை பல்லக்கு. தூளிப்பல்லக்கு

ஜெ


மிக மிக நன்றி! அறியாமையை  அறியவைத்ததற்கு.  தெரிந்தவன்போல எழுதிவிட்டோமே என்று மெயில் அனுப்பிய பின்பே  மனம் கனத்தது. கன்றுதானே முட்டியது தாய் அறியும் என்று சமன் அடைந்தேன்.  உங்கள் பதிலால் மென்மையை உணர்கிறேன். மீண்டும் நன்றியுடன்...வணக்கமும்.  


ஆர் மாணிக்கவேல்