Saturday, August 30, 2014

அன்னையும் காதலியும்

நீலம் தொடங்கியதிலிருந்தே உங்கள் எழுத்துக்கு சன்னதம் வந்தது போல களிகொண்டு வருகிறது வார்த்தைகள்.  “தீராத விளையாட்டுப் பிள்ளை...”என்கிற பாரதியின் பாடல்களுக்கு இதுவரை உரை படித்தேன்.இப்போதுதான் அதன் பொருளை மெய்யுணர்கிறேன். ராதையின் வெறிகொண்ட காதலுக்கு முன்னுரை தொடங்கிவிட்டது.எனினும்,ஒன்பது வயது மூத்த ராதையால் எப்படி கருவின் குருதி வாசம் மாறாத குழந்தையின் மீது மையல் கொள்ளமுடியும்?விளங்கவில்லை.முடிந்தவரை தொடர்ந்து உங்களோடு வருகிறேன்.எங்கேயாவது விடைபூக்கும் என்கிற நம்பிக்கையில்!
                                                                                                                                                       எம்.எஸ்.ராஜேந்திரன் - 
திருவண்ணாமலை.

அன்புள்ள ராஜேந்திரன்,

எனக்கும்தான். தர்க்கபூர்வமாக சொல்லத்தெரியவில்லை. ஆனால் நிகழும்

அதை யதார்த்தத் தளத்தில் வைத்து பார்க்கவேண்டாம். ஒரு உருவகமாக காணும்போது பிரச்சினை இல்லை

ஜெ