Sunday, June 25, 2017

நீர்க்கோலம் – அன்னப்பிரம்மம்




அன்னத்தின் மூலம் பிரம்மத்தை அறிந்தவன் பீமன். தான் அறிந்த மற்போரையும் சுவையுடன் இணைத்துக் கொண்ட விதம் அபாரம். “ஆம், அடுநெறியில் ஒரு சொல் உண்டு. ஆற்றலாகும் உணவு நிறைவடைகிறது. அறிவென்றாகும் உணவு மேன்மையடைகிறது. கருணையென்றாகும் உணவே முழுமைகொள்கிறது” – என்கிறான் பீமன். பலராமர், துரியன், பீமன், கர்ணன், பால்ஹிகர், பீஷ்மர், பலாஹஸ்வர் என அனைவருமே ஆற்றலானவர்கள், நிறைவடையவும் கூடும். கிருஷ்ணன் அறிவானவன், வேத அந்தம் அறிந்தவன், மேன்மையடைகிறான். ஆனால் நேமிநாதர் கருணையானவர், எனவே முழுமையடைகிறார்!!!