Wednesday, June 28, 2017

மாயை






வெண்முரசு நீர்க்கோலத்தில் அடுமனையில் நிகழும் காட்சிகள் அதிர்ச்சியூட்டின. எதிரபாராதது ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவேதான் அந்த நடைமுறைகளை எல்லாம் ஒருவகையான பதற்றத்துடனேயே வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது நடந்தபோது அதிர்ச்சி அடைந்தேன்

அசட்டுத்தனமான விஷயங்களும் சில்லறை விஷயங்களும் இணைந்து மிகப்பெரிய விஷயங்களை நோக்கி நம்மைக் கொண்டுசெல்கின்றன. வாழ்க்கையில் இதைப்பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இதைத்தான் ஊழ் என்றும் மாயை என்றும் சொல்கிறோம்

செல்வக்குமார்