Thursday, September 27, 2018

செவியறியும்போர்



அன்புள்ள ஜெ

அசங்கனின் கதை நடுவே ஏன் வருகிறது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றியது, இந்தப்போர் என்பது பெரியதலைகளின் மோதல். இதிலே சின்னமனிதர்கள் ஒரு பொருட்டே கிடையாது. அவர்களைக் கொன்றுகுவிப்பார்கள். அள்ளிப்புதைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமானியன், மகாபாரதத்தில் பெயர் மட்டுமே உள்ள ஒருவனின், பார்வையில் போர் நிகழ்கிறது. அதுவும் போரை அவன் வெறும் ஓசையாகவே கேட்கிறான். நான் இந்த நுட்பத்தைக் கவனிக்கவில்லை. ஆனால் ஒரு நண்பர் போனில் சொன்னபோதுதான் தெரிந்தது, ஓசையாகவே ஒரு போரை கவனிப்பது எப்படிப்பட்ட அனுபவம் என்று. என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது மதுரை மாசித்திருவிழாவை வீட்டுக்குள் ஒரு பெரிய முழக்கமாக கேட்டதைப்பற்றிச் சொன்னார். போர் வெவ்வேறு கோணங்களில் இந்நாவலில் சொல்லப்படுகிறது. ஆனால் வெறும் சத்தமாகவே கேட்பது மிகப்புதியது

சரவணன்