Friday, September 7, 2018

கட்டுரைகளின் உதவி



அன்புள்ள ஜெ

வெண்முரசு கட்டுரைகள் எல்லாஅமே மிக உதவியானவையாக இருந்தன. நான் இப்போதுதான் மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே தாமரைக்கண்ணனின் மழைப்பாஅடல் விமார்சனம் எனக்கு மிகவும் வழிகாட்டுவதாக தோன்றியது. மழைப்பாடலின் நிலம், அதிலுள்ள பொருளியல் அம்சங்கள் ஆகியவற்றைப்பற்றிய நுட்பமான புரிதலை அடைந்தேன். அவை மழைப்பாடலை வாசிக்க மிகவும் உதவியாக இருந்தன. ஆனால் அக்கட்டுரை ஒரு குறிப்பு போல இருந்தது. பேசுவதற்காகச் சுருக்கமாக எழுதியதாக இருக்கலாம். அதை கட்டுரையாக விரித்து எழுதியிருக்கலாம்

புதூர் கல்யாணராமன்



கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்