Thursday, October 30, 2014

வண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்கவேல்




நன்றி

குருசேத்திரத்திற்கு செல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கிறது.அந்த காரணமே அவர்களை அங்கு இழுத்துபோய் ஒவ்வொருவரையும் ஆணியடித்து அங்கே கட்டியும் வைக்கிறது.

குருசேத்திரத்திற்கு செல்லவேண்டிய நிற்பந்தமோ, ஆணியடித்து  அதில் தன்னை கட்டிக்கொள்ளவேண்டிய எந்ததேவையும் இல்லாத ஒரு பாத்திரம் துரோணர். அவர் காலுக்கு கீழே எல்லாத திசையிலும் பாதைகள் இருக்கின்றது.அவர் விழி செல்லும் பாதையின் எல்லா திசைகளின் கதவுகளும் திறந்தே இருக்கின்றது.ஆனாலும் அவர் தன்னை குருசேத்திரத்தை விட்டு வெளியேற்ற வில்லை. கட்டப்படாத காளை அவர் ஏன் தன்னைப்பலிக்கொடுத்தார் என்று துரோணரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் எண்ணம் எழுந்து கேள்வியாகவே நின்று முன்னோக்கிப்போகமுடியாமல் தடுத்துவிடும். திரு.ஜெ அந்த கேள்வியையே தனக்குள்கேட்டு அதற்கு சரியான பதிலை இங்கு வைத்து உள்ளார்.துரோணரை மிகநெருங்கி அறிவதற்கு அந்த பதில் திறப்பாக உள்ளது.

நான்போகங்களைவிழைபவன்அல்ல
இந்தகைப்பிடிதர்ப்பையுடன்எங்கும்எவ்வகையிலும்என்னால்வாழமுடியும்.ஆனால்நான்துறவியும்அல்ல. இம்மண்ணில்நான்விழைவதுஎனக்கானமதிப்பைமட்டுமே.இளைஞர்களே, என்வாழ்நாளில்நான்இருக்கவேண்டியஇடத்தில்இருக்கிறேன்எனஉணர்ந்ததுஇங்கேஅஸ்தினபுரியில்மட்டும்தான்.” பெருமூச்சுடன்அவர்தன்னைசமநிலைப்படுத்திக்கொண்டார். அஸ்தினபுரியின்படகுகள்சென்றுபிரமதத்தில்இறங்கியசெய்தியைக்கேட்டபோதுஎன்னையறியாமலேயேஎன்கண்கள்நீர்வடிப்பதைஉணர்ந்தேன்.பிராமணனாகியநான்என்தர்மத்துக்கன்றிவேறெதற்கும்கடன்பட்டவன்அல்ல

எந்தமண்ணுக்கும்அரசுக்கும்என்மேல்உரிமையும்இல்லை.ஆனால்இன்றுஇச்செயலுக்காகநான்பீஷ்மருக்குவாழ்நாள்கடன்பட்டிருக்கிறேன்.அவரதுநாடேஎனதுநாடு.அவரதுஅரசின்கடைக்குடிமகன்நான்.அவரதுநட்பும்பகையும்என்னுடையவை.அவருடன்இருந்துஅவருக்காகவும்அவரதுவழித்தோன்றல்களுக்காகவும்உயிர்கொடுத்தலேஎன்அறம்.அதற்கப்பால்என்றும்எச்சிந்தனையும்எனக்கில்லை.இதோஎன்மைந்தனுக்கும்அக்கடமையைவிதிக்கிறேன்.”

ஒரு மனிதன் விழையும்மதிப்புஎன்பது அவன் உயிரைவிட, குலவளச்சியைவிட, வாழ்க்கையைவிட பெரிதாகி விடுகின்றது.

தமுக்குப்போடுவது என்பது ஒரு சமூகத்தை ஞாபகம் படுத்தவதாக மட்டும் உள்ளது என்பதால் தமுக்குப்போட யாரும் செல்லக்கூடாது என்பது ஒரு நிலையாகி விட்ட இந்த நாளில் சிதம்பரம் வட்டம் மஞ்சக்குழி கிராமத்தில் அருளருளும்அருளரசி ஸ்ரீஅகழகுநாச்சித்தாயார்முன் தமுக்கடித்துக்கொண்டுவரும் பெரியவர் முகத்தில் பொங்கும் மகிழ்ச்சி நெஞ்சில் நிறைந்தது.

எப்படி இந்த மகிழ்ச்சி? எதை இதன் மூலம் கண்டுக்கொண்டார்”  அன்னையின் ஊர்வலம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

துணைக்கிராமங்களில் அன்னை வரவேற்கப்படும்போதெல்லாம் அன்னைக்கு அளிக்கும் வரவேற்பு காணிக்கையில் அன்னைக்கு மாலைசாத்தப்பட்டப்பின்பு அன்னை ஆசிக்கூடிய மாலை ஒன்று அவருக்கும் சூட்டப்படும் அப்போது அன்னையைப்பார்த்தேன், அன்னைக்கு முன்னால் அவர் அவருக்குப்பின்னால் ஊர்.

அவர் தப்பு அடிக்கின்றார் என்ற ஊர் தப்பாக நினைத்தது அன்று புரிந்தது.அன்னை, ஊர் இடையில் தான் என்று தனது இடத்தை அவர் அறிந்துக்கொண்டு இருக்கின்றார்.

மதிப்பிற்கும் பின்னால் உலகமும் உயிரும் எவ்வளவு சிறியதாக ஆகிவிடுகின்றது.
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் ”ஆலயம் ஆயிரம்” தஞ்சைப்பெரியக்கோவில் கட்டுரையில் இப்படிச்சொல்கின்றார் “இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூடமன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின்பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கிஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது”


மாபெரும் சோழபேரரசை நிலை நிறுத்திய ராஜராஜசோழன் நின்ற இடமும் அவன் மக்களை நிறுத்திய இடமும் அவன் அரசை அசைக்கமுடியாத இடத்தில் வைத்தது.


நாட்டைப்பிடிப்பவன் சத்ரபதி இல்லை உள்ளங்களைப்பிடிப்பவன் சத்ரபதி என்று திரு.ஜெகாட்டும் அழகே அழகு, மாபெரும் தனுர்வேத வித்தையின் விருட்சமாக வளரும் துரோணரின் சித்திரத்தை செதுக்கிப்போகும்போதே அதில் ஒரு பூவாக பீஷ்மன் பூக்கும் தருணத்தை காட்டி மெய்சிலிர்க்க வைக்கின்றார். இளைஞர்களே, தன்குடிகளில்எளியவனின்உள்ளத்தைக்கூடஅறிந்துகொள்பவனையேசத்ரபதிஎன்கின்றனர்சான்றோர்என்றார்துரோணர்.


சத்ரபதிகளும் மனிதர்கள்தான் ஆனால் அவர்கள் மனிதர்களுக்கான இதயம் கொண்ட மனிதர்கள்.சத்ரபதிகளை நினைக்கும்போதே சர்வாதிகாரிகள் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.யார் சர்வாதிகாரிகள்?சத்ரபதிகளை மட்டும் தான் திரு.ஜெ இங்கு சொல்லி உள்ளார்.



நன்றி