Monday, May 29, 2017

கூர்மை



வணக்கம் சார் ,

இன்றுதான் கணவர் பணிபுரியும் வேலூரில் ஒரு வாரம் இருந்த்து விட்டு தப்பித்தோம் பிழைத்தோமென பொள்ளாச்சி வந்த்து சேர்ந்தேன். திருச்சியின் வெப்பம் பற்றி எழுதி இருந்த்தீர்கள் அப்படியேதான் அல்லது அதைவிட அதிகம் வேலூரில்.
 
அந்த பதிவின் கடைசியில் நீங்கள் எழுதி இருந்த //பொதுவாக அவசரத்தில் பதற்றத்தில் எழுதும்போதெல்லாம் வியப்பூட்டுமளவுக்குத் துல்லியமாக அமைந்துவிடுகின்றது.  ........ சமவெளியில் நதி விரிகிறது. மலைச்சரிவில் அது பெருகிப்பொழியும் கூர்மை.// இதை திரும்பத்திரும்ப வாசித்துக்கொண்டே இருக்கிறேன் எத்தனை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்?
 
நீர்க்கோலத்தை நானும் மகன்களுமாய் எப்போதும் போல ஆர்வமாக ஒவ்வொரு அத்தியாயத்டையும்  இரண்டு மூன்று முறையாக வாசித்து மகிழ்கிறோம்.
நன்றிகளூடன்
-லோகமாதேவி