Sunday, December 28, 2014

வெள்ளம் வடிந்தபின்



அன்புள்ள ஜெமோ

பிரயாகை அழகிய சிறிய சித்திரங்களுடன் சென்றுகொண்டிருகிறது. கொஞ்சநாள் வாசிக்க விட்டுவிட்டு ஒரே மூச்சிலே வாசித்து முடித்தேன். சண்முகவேலின் ஓவியங்கள் அதே தரத்திலே இருப்பதை கண்டு வியந்தேன்

நாவலின் பெரிய அழகே பலமனிதர்களை தொட்டுத்தொட்டுச் செல்வதுதான். சிவையை ஒரு உற்சாகமான வேலைக்காரியாகப் பார்த்தது ஞாபகத்திலே இருக்கிறது. அவள் அரசியாகி கிறுக்காகி செத்துப்போய் அந்த பால்கனியில் விதுரர் வந்து உடகார்வதைப்பார்க்கையில் மனம் பதைத்தது. வாழ்க்கை எவ்வளவு சீக்கிரமாக ஓடிப்போய்விடுகிறது

வெள்ளம் வந்து வடிந்தபிறகு காவேரியிலே நின்றால் ஒரு தனிமை வரும். அங்கே அவ்வளவு வெள்ளம் வந்தது ஞாபகமே வராது. நினைத்தே பார்க்கமுடியாது. ஒருவருஷம்தான் ஆகியிருக்கிறது அதற்குள் இப்படி கதை வளர்ந்துவிட்டது

அதைவிட பிரயாகையை வாசித்தபின் நீலம் வாசித்தது போன ஜென்ம ஞாபகம் மாதிரி ஆகிவிட்டது. இந்த முழு வாழ்க்கை அனுபவம்தான் வெண்முரசின் பங்களிப்பு

சாரங்கன்