Sunday, July 26, 2015

உண்டாட்டு

எதிர்பார்த்தபடியே உண்டாட்டு அத்தியாயம் பிரமாதம். கொண்டாட்ட மனநிலையை அப்படியே வடித்துவிட்டீர்கள். சூதன் பாடும் ஒரு வரியில் ருக்மணி கண்ணனைக் கண்டடைவதும் அற்புதமாக இருந்தது.

தனக்குரியவனை(ளை)க் கண்டடையும் தருணம் என்பது அம்பை-பீஷ்மரிலிருந்து, அம்பிகா-விசித்திரவீர்யனிலிருந்து, பீமன் - இடும்பியிலிருந்து, பாமா-கிருஷ்ணன் வரை மிக அற்புதகமாக வந்திருக்கிறது. அதைத் தொடந்திருக்கிறீர்கள்...

படித்து முடித்த பிறகு இப்படி ஒரு உண்டாட்டில் என்னால் உட்கார முடியுமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். மனவிலக்குகள் நீங்கி கொண்டாடுவது அவ்வளவு சுலபம் இல்லை! முதல் ஹோலியின்போது கழுவ எத்தனை நேரம் ஆகும் என்றுதான் யோசனை ஓடிக் கொண்டே இருந்தது...

அன்புடன்
ஆர்வி