Friday, July 31, 2015

உடன்போக்கும் செவிலியும்

ஜெ

மன்னிக்கவும்

நீண்டநாட்களாக வெண்முரசு வாசிக்கவில்லை. விட்டுப்போய்விட்டது. நேற்று வரை பதினைந்துநாட்களாக உட்கார்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்

அமிதையின் கொந்தளிப்பைப்பற்றித்தான் எழுதவேண்டும். மகள் விட்டுச்செல்லும்போது அன்னை படுகிற பாடு அற்புதமாக வந்துள்ளது. உண்மையான பாசம் அடையக்கூடிய எல்லா மகிழ்ச்சியும் தடுமாற்றமும் துக்கமும் உள்ளது

நம் தமிழிலக்கியத்தில் இது ஒரு துறையாகவே உள்ளது. உடன்போக்கு செல்லும் தலைவியை எண்ணி துயரமடைந்து செவிலியன்னை பாடும் ஏராளமான பாடல்கள் சங்கப்பாட்டில் உள்ளன. இந்த அத்தியாயங்கள் அந்தக் குறிப்புகளைத்தான் கொடுக்கின்றன என்று விஷயமறிந்தவர்களுக்குத்தெரியும். மற்றவர்களுக்கு தேவையற்ற நீட்டலாகக்கூடத்தோன்றலாம்

சம்ஸ்கிருதத்தில் இந்த உடன்போக்குக்கு செவிலியன்னை வருந்தும் இலக்கிய துறை அல்லது மரபு உண்டா?

சாரங்கன்

அன்புள்ள சாரங்கன்

சங்க இலக்கியத்தில் உள்ளது போல ஒரு தெளிவான துறையாக ஏராளமான படல்கள் இல்லை.

ஆனால் கதாசப்தசதி போன்ற நூல்களில் செவிலியன்னையின் துயரம் ஒரு பாடல்பொருளாகவே உள்ளது

வெண்முரசில் அது சங்கப்பாடல்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது

இது காவியம். விஷயமறிந்தவர்களுக்காக எழுதப்படுவது

அறியாதவர்கள் கேட்டுத்தெரிந்துகொள்ளட்டுமே

ஜெ