Tuesday, September 1, 2020

நிலம் எழுவது

 


அன்புள்ள ஜெ

வெண்முரசில் வரும் நிலங்களையும் ஊர்களையும் பற்றிய கடிதங்கள் சுவாரசியமானவை.இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய படைப்பு ஒரு பெரிய நிலத்தை ‘உண்டுபண்ணுகிறது’ என்பது ஆச்சரியமான விஷயம். சூட்சுமமாக இது நடந்துகொண்டிருக்கிறது. நம் நவீன இலக்கியவாதிகளுக்கு இதெல்லாம் எப்படி எங்கே நடக்கிறதென்றே தெரியாது. உண்மையில் எல்லா நிலங்களுமே இப்படி இலக்கியத்தால் உருவாக்கப்படுபவைதான். நிலங்களுக்கு என்று இயல்புகள் ஏதுமில்லை. சில இயல்புகளை இலக்கியங்கள் கண்டடைந்து அவற்றை தொகுத்து முன்வைக்கின்றன. அந்நிலங்கள் உருவாகி வந்துவிடுகின்றன.வெண்முரசு இப்படி ஒரு பெரும்பணியைச் செய்திருக்கிறது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்

எஸ்.ஆறுமுகம்