Friday, September 4, 2020

நிலங்களின் வாழ்வு

 


அன்புள்ள ஜெ

வெண்முரசின் விரிவான நிலச்சித்தரிப்பு ஏன் என்பதை ஒட்டுமொத்தமாக நாவல்களை வாசித்துமுடித்தபோதுதான் நானும் புரிந்துகொண்டேன் என்பதை மறுக்கமாட்டேன்.

தொடக்கத்தில் அது கதைக்களத்தை நிறுவுவதற்காக என்றுதான் நினைத்தேன். நான் அதிகம் வாசித்தவை நவீன நாவல்கள், அவற்றில் இப்படியெல்லாம் வர்ணனைகள் இல்லை. சரி தள்ளிவைப்போம் என்று நினைத்ததுண்டு. சொல்லப்போனால் ஒருநாள் ஒரு அத்தியாயம் என்பதனால்தான் அவ்வளவற்றையும் வாசித்தேன். இல்லாவிட்டால் வாசிக்காமல் விட்டிருப்பேன்

ஆனால் நாவல்கள் முடிந்தபின்னர் தெரிகிறது. இந்த நாவல்கள் நிலப்பரப்பின் மோதல்கள் என்று. நிலம்தான் நாவலே. மனிதர்கள் அல்ல. பாலைவனம், புல்வெளிகள், காடுகள், ஆறுகள், நகரங்கள், சிறிய ஊர்கள். இவைதன நாவல்.இவற்றுக்கிடையே என்ன நடக்கிறது என்றுதான் வெண்முரசை பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். பாலைக்கு அப்பாலிருந்து எல்லாவற்றையும் ஆட்டிவைக்கும் துவாரகையையும் அப்படித்தான் நான் பார்க்கிறேன்

எஸ்.சரவணன்