Wednesday, September 2, 2020

நிலவில்

 



அன்பின் ஜெ..

ரொம்ப நேரம் முழு நிலவை பார்த்து கொண்டு வந்தேன்...

என் சிறுவயது முதலே விஸ்வரூப தரிசனம் என்பதில் என்பதில் எனக்கு மாபெரும் மயக்கம் உண்டு.. .நான் கண்ட படங்களில் மட்டுமே அதை பலநூறு தடவை உருவகப் படுத்தி இருக்கிறேன்..அது கண்டடைய முடியாதது என்றும் என் வாழ்நாளில் நிகழாது என்றும் பல நேரங்களில் உருகி அழுததும் உண்டு... மிக அந்தரங்கமான நேரங்கள் அவை.. யோகிராம்சுரத்குமாரை கண்ணீர் மல்க பலமுறை வேண்டிக் கொண்டதில் ஒன்று.. அவர் எனக்கு மனம் கனிந்து அளித்த கொடை உங்கள் அருகாமை...அவர் மேலும் எனக்கு மனம் கனிந்து அளித்த மாபெரும் விஸ்வரூபம் வெண்முரசு... நான் கண்டதை வைத்து மட்டுமே மனம் ததும்பி முழுமை கொண்டேன்...அதை மீண்டும் மீண்டும் படிப்பதே என் வாழ்வு... என் மிச்சமிருக்கும் வாழ்நாளில் அது இன்னும் நிறைய நிறைய விஸ்வரூபங்களை தந்து கொண்டே இருக்கும்....  வெண்முரசு மட்டுமல்ல..ஏதேதோ எழுதத் தோன்றுகிறது இப்போதைக்கு இது போதும்...  

விஜய் சூரியன்