Tuesday, September 1, 2020

பாரத தரிசனம்

 


 

அன்புள்ள ஜெ

வெண்முரசு பழைய இந்தியாவின் சித்திரத்தை அளிப்பது பற்றிய கடிதங்களைக் கண்டேன். என்னுடைய அனுபவமும் அதுவே. நான் வட இந்தியாவுக்குச் செல்லும்போதெல்லாம் வெண்முரசிலே அந்த இடம் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் என் நினைவில் நிற்கும். புராணமுக்கியத்துவம் இல்லாத இடங்கள் கூட அப்படித்தான் என் மனதிலே பதிந்திருந்தன. ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு வாழ்க்கை நிகழ்ந்திருக்கிறது என்ற எண்ணம் வந்தது. எங்கள் மூதாதையர் நிலம் என்ற உணர்ச்சிதான் முக்கியமானது. அதை வெண்முரசு உருவாக்குகிறது. இந்தியா என்ற ஒற்றைப்பண்பாட்டுப்பரப்பை உருவாக்கியதே வெண்முரசின் சாதனை. வெண்முரசை பலர் வெறுப்பதற்கான காரணமும் அதுதான்.

 

ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணமூர்த்தி