Sunday, September 6, 2020

ஊர்களின் பரிணாமம்

 


  

அன்புள்ள ஜெ

வெண்முரசில் பழங்குடி ஊர்களும் பெரியநகரங்களும் வருவதைப்பற்றிய கடிதம் வாசித்தேன். சுவராசியமான கருத்துதான். ஆனால் அதையே பலவாறாக விரித்தும் பார்க்கலாமென நினைக்கிறேன். பழங்குடி ஊர்களிலேயே இடும்பபுரி போல பக்காவான பழங்குடி ஊர்கள் உள்ளன. சிலர் ஒரு படிமேலே சென்றுவிடுகிறார்கள். கங்கர்களைப்போல. இன்னும் சிலர் பெரிய அரசர்களாக ஆகிவிடுகிறார்கள். காந்தாரர்களைப் போல. இன்னும் சிலர் அதற்கான முயற்சியில் இருக்கிறார்கள். ஹிரண்யபுரி மாதிரி. இந்த எல்லாக்குடிகளுக்கும் நடுவே அவரவர் இடங்களுக்கான பூசல் இருந்துகொண்டே இருக்கிறது. மத்ரநாடுகூட பழங்குடிநாடுதான். பூரிசிரவஸ் பழங்குடி அடையாளத்திலிருந்து வெளியே செல்லத்தான் முயற்சி செய்கிறான். பழங்குடிகள் கீழ்ப்படியில் இருந்து பேரரசுகள் வரை எல்லாம் படிநிலைகளிலும் வெண்முரசில் இருக்கிறார்கள். படிக்கட்டில் எந்த இடத்திலே இருக்கிறார்கள் என்பதுதான் அரசியலைத் தீர்மானிக்கிறது

சாரங்கன்