Monday, September 7, 2020

வணிகமும் போரும்

 


 அன்புள்ள ஜெ

வெண்முரசிலே போர் நிகழ்வது அரசுகள் நடுவேதான். வணிகர்கள் அரசில் ஈடுபடுவதில்லை. அவர்கள் போர்களை உண்டுபண்ணுவதோ போரினால் லாபம் அடைவதோ இல்லை. அவர்கள் மிகமிக முக்கியமானவர்கள். ஆனால் சந்தைக்கான போர் அல்லது கொள்முதலுக்கான போரே இல்லை. இது ஆச்சரியமான விஷயமாக எனக்குப்பட்டது

இந்த வணிகப்போர்கள் எல்லாம் ஐரோப்பியப் பண்பாடு உருவானபிறகு வந்தது என்று நினைக்கிறேன். மார்க்ஸ் கூட அதை முதலாளித்துவத்தின் அடிப்படைப்பண்பாகச் சொல்கிறார். முதலாளித்துவத்தில் வணிகர்கள்தான் உண்மையான அரசர்கள். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அரசர்கள் போரிட்டதுபோல இன்றைக்கும அம்பானியும் அதானியும் போரிட்டுக்கொள்கிறார்கள்.

கே.மாரிமுத்து