Friday, September 4, 2020

மாபெரும் நிலம்

 


அன்புள்ள ஜெ

மகாபாரதத்தில் இந்தியாவின் நிலப்பகுதியைச் சொல்லியிருப்பதைப்பற்றிய வர்ணனைகளை வாசித்தேன் அது சார்ந்து நிறைய பேசிக்கொண்டே செல்லலாம். பலகோணங்கள் உருவாகி வரும். மகாபாரத வாசிப்பில் எனக்குப்பட்டது நிலங்கள் அதில் பின்னிணைப்பாகத்தான் வருகின்றன. பல தீர்த்தங்கள் கற்பனையாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. பல தீர்த்தங்களைக் கண்டுபிடிக்கவே முடியாது.

அதேசமயம் மகாபாரதத்தில் கடல்வர்ணனைகள் மிகமிகக்குறைவு. துறைமுகங்களைப்பற்றிய செய்திகளே இல்லை. பனிமலைகளில் செல்வதுபோல சொல்லப்படவில்லை. மகாபாரதம் கங்கைச்சமவெளிக்குள்ள்யே நிகழ்ந்து முடிகிறது. மற்றதெல்லாம் செவிச்செய்திகள், அல்லது பின்னிணைப்புக்கள்

வெண்முரசுதான் மகாபாரதத்தை இந்தியா முழுக்க கொண்டுசெல்கிறது. லடாக் முதல் குமரிமுனைவரை கொண்டுசெல்கிறது. அப்படி வெண்முரசு மகாபாரதக்கதையை இந்தியா முழுமைக்குமாக ஆக்கியதுதான் பெரிய சாதனை என நினைக்கிறேன்

ரவிச்சந்திரன்