Saturday, September 5, 2020

வணிகர்கள்

 


அன்புள்ள ஜெ,

வெண்முரசில் நிலம் பற்றிய சர்ச்சையை பார்த்தேன். அந்நிலங்களை இணைப்பவர்களாக இந்நாவல்களில் வரும் வணிகர்கள் மிகமுக்கியமானவர்கள். அவர்கள் மொத்த நாவலிலும் எந்தப்பங்களிப்பையும் ஆற்றவில்லை. அவர்களுக்கு போரில்கூட எந்த இடமும் இல்லை. ஆனால் காற்றுபோல அவர்கள் உலாவியபடியே இருந்திருக்கிறார்கள். இது ஓர் ஆச்சரியமான விஷயம் என நினைக்கிறேன்

வணிகர்கள் அரசியலை கவனிப்பதே இல்லை. அவர்கள் அரசியலில் ஒரு கண்வைத்திருக்கிறார்கள். அரசியல் எக்கேடு கெட்டாலென்ன என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் எல்லாவற்றையும் இணைக்கிறார்கள். ஒரு காட்டுப்பழங்குடி கொஞ்சம் நகாரீகத்துக்கு வந்துவிட்டால் வணிகர்கள் உடனே வந்து இணைந்துகொள்கிறார்கள். பாரதவர்ஷத்துடன் அவர்களை இனைத்துவிடுகிறார்கள். முதற்கனலில் கங்கர்குடி அப்படி இணைகிறது. இடும்பர்கள் இணைகிறார்கள். அப்படி இணைப்பு நடந்துகொண்டே இருக்கிறது

எஸ்.சரவணக்குமார்