Thursday, February 15, 2018

சரிவு



அன்புள்ள ஜெ

கர்ணனின் சரிவு ஆரம்பம் ஆவது எங்கே? அவன் பாஞ்சாலியை அவமானப்படுத்தியபோதா? அல்ல. அதற்கு முன்னரே துரியோதனன் அவமானப்படுத்தப்படும்போதே அவன் மனம் கருகிவிட்டது. வெய்யோன் முடிவதே கர்ணன் மேல் கிரகணம் விழுவதன்போதுதான் என்பதை நினைத்துக்கொண்டேன். அங்கிருந்து தொடர்ச்சியாக ஒரு சரிவுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அவனுடைய குணாதிசயத்திலே என நினைக்கிறேன். அதை அவனால் ஒன்றுமே செய்யமுடியாது. வஞ்சமும் வன்மமும் நிறைந்த ஆளாக மாறிவிட்டான்.


எஸ்.கருணாகரன்