Wednesday, February 28, 2018

கர்ணனின் மீட்பு



ஜெ

வெண்முரசின் இப்பகுதிகளிலெல்லாம் கர்ணன் மிகமிகப் பலவீனமானவனாகத்தான் இருக்கிறான். அவனுக்குச் சமத்காரமாகப் பேசத்தெரியாது. அவன் வீரனே ஒழிய பெரிய ராஜதந்திரி அல்ல. உண்மையிலே மகாபாரதத்தில் வடக்கே உள்ள பிரதிகளில்தான் கர்ணனைப்பற்றிய பாராட்டுக்கள் உள்ளன,. தெற்கே உள்லவற்றில் கர்ணன் கெட்டவன் என்றுதான் இருக்கிறது. நிந்தைக்குரியவனாகிய கர்ணன், தீய உள்ளம் கொண்டவனாகிய கர்ணன் போன்ற அடைமொழிகள் ஏராளமாக வருகின்றன. 


இந்நாவலே கூட வஞ்சம் வந்தால்தான் அவனிடம் நிமிர்வும் வீரமும் வெளிப்படுகிறது என்று சொல்கிறது. அவன் எங்கே நிமிர்ந்து எப்படி பெரும்புகழுக்குரியவனாக மடிகிறான் என்பதை மகாபாரதம் பெரிதாகச் சொல்லவில்லை. பிற்காலத்து வந்த கதைகளில் அவன் கொடையாளி என்பது நிறைய ஏற்றப்பட்டு அவனை தூக்கியிருக்கிறார்கள். மகாபாரத மூலங்களில் கர்ணன் பெரிய கொடையாளி என்று எங்கும் சொல்லப்படவில்லை. கர்ணனின் மீட்சி எப்படி நடக்கும் என ஆவலாகக் காத்திருக்கிறேன்


சாரங்கன்