Friday, February 23, 2018

கர்ணனின் நிலை


ஜெ

கர்ணன் அவன் உள்ளத்தால் மிகத்தளர்ந்த நிலையில் இருக்கிறான். கோர்வையாகச் சிந்திக்கவும் முடியவில்லை. இயல்பாகவே அவனுக்கு சூழ்ச்சித்திறனும் இல்லை. துரியோதனனோ எல்லா தீய ஆற்றல்களையும் உச்சத்தில் கொண்டவனாக இருக்கிறான். கணிகரும் சகுனியும் உடனிருக்கிறார்கள். அவனை சூழ்ந்துகொண்டு வீழ்த்திவிடுவார்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவனை அவர்கள் வீழ்த்தும் விதம் பரிதாபமாக இருந்தது. அவனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. தன் கோபத்தைக் கொட்டியதுமே தடுமாறிவிடுகிறான்.  கர்ணனை இத்தனை பரிதாபமாக இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என நினைக்கிறேன்


ராஜ்