Monday, March 26, 2018

அச்சம்


​​அன்புள்ள ஜெ

நெடு நாட்களுக்குப் பின்னர் உங்களுக்கு

உங்கள் ஆக்கங்களை நான் இலக்கிய நோக்கில் வாசிப்பதில்லை.

உங்கள் தத்துவ எண்ணங்களை என் வாழ்க்கையில் எதிர் நோக்கும் சவால்களை சமாளிக்க உதவும் உபகரணங்களாகவே பார்க்கிறேன்.

அந்த வகையில் இன்றய ஆக்கம் எனக்கு ஒரு படிப்பினையை தந்தது.

அச்சப் பட்டு கொண்டே இருந்தால் அந்த அச்சமே என்னை கொன்றுவிடும்.

அச்சத்தை மீறி அப்பால் சென்று விடு.  அவனே இங்கு செயல் வகுப்பவன். ஆகவே அறத்தோன் 

அந்த இறைவனே அறத்தோனே என்னை வழி நடத்தட்டும் என்று சொல்லிக் கொண்டேன்.

சிறிது அமைதியுற்றேன். நன்றி

அன்புடன்


மாலா