Saturday, March 31, 2018

துயர்



அன்புடன் ஆசிரியருக்கு 

இன்றைய இமைக்கணத்தின் அத்தியாயத்தை வாசித்தபோது பெரும் ஏக்கமும் துயரும் வந்து சூழ்ந்து கொண்டது. ஒருவேளை அது இப்படி முடிந்திருந்ததால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஆனால் குந்தியில் திரௌபதியில் ஊறியது அல்லவா அந்த வஞ்சமும் பழியுணர்வும். 

இந்த அத்தியாயத்தை இறப்பு நின்று போன முதல் அத்தியாயத்துடன் இணைத்து கொள்ள முடிந்தது. பெருமானுடர்கள் அடையும் துயரால் மட்டுமே மானுடம் முன் செல்கிறது. அவர்கள் தங்கள் திறனால் நிறைவடைந்தால் உயிரியக்கம் நின்று போகும் என்று தோன்றியது .

அன்புடன் 

சுரேஷ் பிரதீப்