Friday, April 26, 2019

துச்சாதனன்



அன்பின் ஜெ,

வணக்கம்!.

துச்சாதனின் உள்ளதில் எண்ணம் என்று ஒன்று உள்ளதாக தான் கருதியதில்லை என்று கர்ணன் நகைப்பிற்க்காக சொன்னாலும், உண்மையே.

அன்னையின் ஆணையை தலைமேற்க்கொண்டு துரியனின் நிழலுருவாய் இதுகாறும் அமைந்தவன்.


போர்களத்தில் குந்தி கர்ணனை சந்தித்ததை பற்றி துரியோதனன் அறிந்திருப்பதை சொல்கையில் முதல் முறையாக மனதளவில் தமையனை விலகிச்செல்கிறான். திரௌபதி பொருட்டு பிழைபொறுக்க கர்ணனிடம் மன்றாடியதும் பேரெடை ஒன்றை கீழிறக்கிய உவகையோடு வெடித்து சிரிக்கிறான்.

 இன்றைய (இருட்கனி - 16) அத்தியாயத்தில் துச்சாதனின் மேல் கொண்டிருந்த உள்ளகசப்புகள் அனைத்தும் அகன்றுவிட்டது.

-யோகேஸ்வரன் ராமநாதன்.