Sunday, April 14, 2019

மயக்கம்


ஜெ

நான் எப்போதுமே நினைப்பது ஒன்று உண்டு. தெள்ளத்தெளிவானவற்றை எளிதாக எழுதிவிடலாம், மனம் மயங்குவ்சது சொல்குழறுவது உள்ளம் குழம்புவதுபோன்றவற்றை எழுதுவதுதான் கடினம். ஏனென்றால் அந்த மனநிலைக்கே சென்று எழுதாவிட்டால் குழப்பமாக ஆகிவிடும். அந்த மனநிலைக்கே சென்றுஎழுதியவை கர்ணனின் சடலம் கிடக்கும் காட்சி. துரியோதனன் பேசிக்கொண்டே இருக்கிறான். ஒன்றிலிருந்து ஒன்று என இயல்பாக மனம் தாவிக்கடக்கிறது. சில புதிய விஷயங்களைச் சொல்கிறான். பல விஷயங்களை மறைக்கிறான். எங்கே செல்கிறான் என்ன பேசுகிறான் என்பதே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறான். அழுவதற்குப்பதில் அவ்வாறு பேசுகிறான். அந்த குழப்பமும் மயக்கமும் உளறலும் கண்டடைதலும் கலந்த இடம் ஆழமான ஒரு பகுதி

சாரங்கன்.