Monday, August 19, 2019

மகாருத்ரன்




ஜெ


அஸ்வத்தாமனை மகாருத்ரன் எதிர்கொள்ளும்போது சொல்லும் ஒரு விஷயம் என்னை தொந்தரவுசெய்துகொண்டே இருந்தது. மாமனிதர்கள் யார்? தெய்வமாகிறவர்கள் யார்? மண்ணில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் மட்டும்தானா? மானுட ஆற்றலை மீறிய பெருஞ்செயல்களை செய்பவர்கள் மட்டும்தான் தெய்வங்களாகிறார்கள். ஏனென்றால் நாம் நம்முடைய ஃபோக் மரபில் பார்த்தோமென்றால் தெய்வமாகி நிற்பவர்கள் பலர் மாவீரர்களே ஒழிய நற்செயல்களை மட்டுமே செய்த சான்றோர்கள் அல்ல. இதை நீங்களே தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் என்ர நூலில் விரிவாகப்பேசியிருக்கிறீர்கள்.

நான் இயற்றவிருப்பதை ஏன் இயற்றுகிறேன்? அச்செயலால் எவருக்கு என்ன பயன்? இக்கொடுஞ்செயலை இயற்றும் நான் எவ்வண்ணம் இங்கே நிலைகொள்ளுவேன்?”

என்று அஸ்வத்தாமன் கேட்கிறான். அதற்கு சிவன் பதில் சொல்கிறார்


அவர்கள் சரித்திர சக்தியை தாங்கள் கொண்டுசெல்கிறார்கள். அவர்களுக்கு என்று கடமை உள்ளது. அதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என்ரு அவர்களுக்கே தெரிந்திருக்காது. அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும். ஆகவே செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வரலாறு அவர்களால் எதை செய்துகொள்கிறது என்பதை அவர்கள் அறியவே முடியாது. நன்மை தீமை என்பதெல்லாம் மனிதர்கள் அந்தந்த சந்தர்ப்பங்களைக்கொண்டு சொல்லிக்கொள்வதே ஒழிய அது பிரம்மத்துக்கு ஒரு பொருட்டே அல்ல. அதில் எல்லாமே நிகழ்வுகள்தான். எல்லா நிகழ்வுகளும் சமம்தான். இவ்வாறு பார்க்கும்போதுதான் துரியோதனன் ஏன் தெய்வமானான் என்பதைப்புரிந்துகொள்ள முடிகிறது

ராகவ்