Wednesday, August 21, 2019

கிராதம்



ஜெமோ,
                  

நீங்கள் அடிக்கடி சொல்வதைப்போல, ஒரு நாவலை தொகுத்து எழுதும் பொழுது அந்நாவலின் வாசிப்பனுவத்தை பெருக்கிக் கொள்ள முடிகிறது.

மாநாகத்திலிருந்து  மகாவஜ்ரம் வரையிலான தொல்வேதங்களின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியையும் உள்ளடக்கியுள்ள இந்நாவலை  அவ்வளவு எளிதாக தொகுத்து எழுதி விடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இன்னும் பரந்துபட்ட வாசிப்பு எனக்குத் தேவையென்ற  ஞானம்தான் கிராதம் பற்றிய இந்த அவதானிப்பை எழுதும் போது கிட்டியது.

காடுகளுக்கு சென்று மீளும்  தர்மனின்  சொல்வளர்காட்டுப் பயணத்தை Dharman's Sabbatical Leave என்று உருவகித்துக்  கொண்டேன். திசைகளுக்குச்  சென்று மீளும்  அர்ஜுனனின் கிராதப் பயணத்தை On the Job Training for Arjuna என்று உருவகித்திருக்கிறேன்.





அன்புடன்
முத்து