Wednesday, August 28, 2019

குருதிமழை2



ஜெ

அஸ்தினபுரிக்குமேல் குருதிமழை பொழியும் காட்சி இதற்கு முன்னால் காந்தாரி நகர்புகுந்தபோது வந்தது. 11 ருத்ரர்கள் அப்போதுதான் நகருக்குள் நுழைந்தார்கள். அந்த நகருள் நுழையும் காட்சியே அபாரமாக காட்டப்பட்டிருந்தது. அவர்கள் ஒரு துளி ரத்தம் குடித்து கண் விழி திறந்தார்கள். கிளம்பி அஸ்தினபுரிக்குள் வந்தார்கள்.

அன்றைக்கு அவர்களைக் கொண்டுவந்தவள் காந்தாரி. அவளிலிருந்தே அழிவு. ஆனால் அவள் அழிவையே அறியாதவளாகவும் நியாயம் தவறாதவளாகவும் கசப்பே இல்லாதவளாகவும் பேரன்னையாகவும் இருக்கிறாள். இதை எப்படிப்புரிந்துகொள்வது? இதை விதி என்றுதான்ச் சொல்லவேண்டும்

செல்வராஜ்