Sunday, August 18, 2019

நெருப்பு நீர் நிலம்



அன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரத்தை வாசிக்கும்போது ஒரு விஷயம் சட்டென்று தட்டுபட்டது. அது முதலில் நெருப்பால் மூடப்படுகிறது. அதன்பின் நீரால் மூடப்படுகிறது. கடைசியாக மண்ணால் மூடப்படுகிறது.

முதற்கனலின் தொடக்கத்தில் குருக்ஷேத்திரம் வரும்போது பெரிய மண்புற்றுகளுக்குள் தேர்களும் யானை எலும்புக்கூடுகளும் மட்கிக்கொண்டிருக்கும் களமாகவே காட்டப்படுகிறது.

இந்தக்குருக்ஷேத்திரத்தை அப்போதே மனதில் உருவகித்து அதை எழுதினீர்களா அல்லது எழுதி எழுதி அந்தத் தொடர்ச்சியில் கொண்டுசென்று சேர்த்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் இந்த யூனிட்டி ஆச்சரியப்படச் செய்கிறது

ராஜேந்திரன் எம்