Friday, August 23, 2019

கடிதங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசில் நடுவே கடிதங்கள் போடாமலாகிவிட்டீர்கள். நான் எழுதிய சிலகடிதங்களை படித்தீர்கலா என்ற சந்தேகம் வந்தது. நான் கடிதங்களை இங்கே பார்ப்பதுதான் நீங்கள் அவற்றை படிக்கிறீர்கள் என்பதற்கான ஆதாரம். அதுதான் நான் அவற்றை எழுதுவதற்கும் காரண, நான் வாசித்ததுமே உங்களிடம் பேச ஆரம்பிக்கிறேன். அதைத்தான் அவ்வப்போது எழுதுகிறேன். இங்கே கடிதமாக எழுதவேண்டும் என்றால் ஒரு முக்கியமான விஷயம் அதிலே இருக்கவென்டும் என நினைபெபென். அதை எழுதியதும் எனக்கே அந்த பரபரப்பு போய்விடும். ஆனால் பல விஷயங்களை நானே கையில் வைத்திருக்கிறேன். ஒரு நீண்ட கட்டுரையாக எழுதவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் என்னால் அதை எழுதமுடியுமா அதற்கான சந்தர்ப்பம் வருமா என்று தெரியவில்லை. என்னுடைய மொழியும் அந்தளவுக்கு நல்லது அல்ல. நான் வெண்முரசை மட்டுமே தீவிரமாகப் படிக்கிறேன். ஆகவேதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

வெண்முரசுக்குக் கடிதம் எழுதியவர்கள் சிலர் நின்றுவிடுகிறார்கல். தண்டபாணி துரைவேல் அவர்களின் கடிதத்தை நீண்ட இடைவேளைக்குப்பின் பார்த்தேன். சிலர் எழுதி நின்றுவிட்டு திரும்பி வராமலேயே போய்விடுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து வாசிக்காமலாகிவிடுகிறார்கல் என நினைக்கிறேன். எனக்கு எழுதுவதில் ஒரு சந்தேகம் வந்து நான் நிறைய எழுதாமல் நிறுத்திவிட்டேன். மீண்டும் எழுதுகிறேன்

மகேஷ்