Saturday, August 24, 2019

துரியோதனன் படுகளம்






இன்றல்ல, நாளையும் வரும்நாளைகள் அனைத்திலும் இங்கே மானுடர் இதை நடிப்பார்கள். இவ்வண்ணம் கௌரவ அரசர் மீண்டும் மீண்டும் தொடையுடைத்து கொல்லப்படுவார். கூத்துகளில், சிற்பங்களில், நூல்களில். அதன்பொருட்டே அவர் தெய்வமென அழியாமல் இங்கே நிறுத்தப்படுவார். 

யௌதேயன் சொல்லும் இந்த வார்த்தைகளை நினைத்ததும் என் சொந்த ஊரில் ஆண்டுதோறும் நடக்கும் துரியோதனன் படுகளம் காட்சியை நினைவுகூர்ந்தேன். உண்மைதான் துரியோதனன் மூவாயிரம் ஆண்டுகளாக நாள்தோறும் கூத்துகளில் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் தொடையறைந்து கொல்லப்படுகிறார். யௌதேயன் சொன்னதுபோல பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான மிகப்பெரிய எச்சரிக்கையாகவே அவனுடைய கொலை நிலைகொள்கிறது


சத்யமூர்த்தி