Sunday, February 22, 2015

அகம் நுழைய முடியாதவள்

வெண்முகில் நகரில் இதுவரையான அத்தியாயத்தில் ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொருவரின் அகம் நுழைந்து பாண்வர்களை பாஞ்சாலி அறிந்துகொள்கிறாள்.
தருமனை கணவனாக, பீமனை துணைவனாக, நகுலனை விழைவாக, சகதேவனை குழவியாக... ஆனால் அர்சுனனை...!?
அவளால் அறிய முடயாத ஒருவன் அர்சுனன்.
திரௌபதி என்ற மாயையைப் புணர்து அவளை சாதாரண மாணிடப் பெண்ணாக்கியவன்.
அர்சுனன் அகம் நிறைந்த அறிந்த ஒருவன் இருக்கிறான்... அவனன்றி அர்சுனனை நிறைக்க யவராலும் இயலாது..!
மாயன் அவன்.!
- தினேஷ்குமார்.