Saturday, February 21, 2015

சர்வகல்விதமேவாஹம்



சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்! 

என்ற வரியில் தொடங்குகிறது பத்தொன்பதாம அத்தியாயம். அந்த வரி சாக்த மரபிலே முக்கியமானது. தேவிபாகவதத்தில் உள்ளது. முற்காலத்தில் சிவனும் விஷ்ணுவும் பிரம்மனும் தங்கள் மூலமென்ன என்று அறிவதற்காக தவம் செய்தார்கள். பல ஆண்டுக்காலம் அவர்கள்தவம்செய்து செய்து குழந்தைகளாக ஆனார்கள். குழந்தைகள் முலைப்பாலுக்காக அ்ழிுதன. அப்போது வானில் ஒருகுரல் எழுந்தது. அதுதான் இது. பராசக்தி தன்னை வெளிப்படுத்திய முதல் இடிமுழக்கம். இங்குள்ள அனைத்தும் நானே. நானன்றி தொன்மையாக ஏதுமில்லை என்பது பொருள்

அந்த வரியிலிருந்து தொடங்கி சென்றிருப்பதை நண்பர்கள் அறிவதற்காக இதை எழுதினேன். நீங்களேகூட இதை சொல்லியிருக்கலாம்

சுவாமி