Monday, February 23, 2015

சில தாய் மகன் உறவு





குந்திக்கும் அர்ஜுனனுக்குமான உறவு சற்று வித்தியாசமானதாக பிரயாகையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும். குந்தி அர்ஜுனனை நெருங்க விடுவதில்லை. ஆனால் அடுத்தவர்களிடம் பேசும் போதும் அவன் மேல் ஒரு கண் இருக்கிறது. அவள் நகை அசைவுகளின் மூலமாய் அவன் எண்ணத்தை அறிகிறான் அர்ஜுனன். அர்ஜுனன் வார்த்தைகளுக்கு முகம் சிவக்கிறாள்.

இதே போல தான் சித்ராங்கதன் மீதும் சத்யவதிக்கு ஒரு விஷேச கவணம் இருந்ததாக ஞாபகம். இப்படி பட்ட உறவுகளை எப்படி புரிந்து கொள்வது. மகனின் மூலமாக அவனை அளித்த அவர்களின் விருப்பத்திற்குரிய ஆன் மகனை ரசிக்கிறார்களா?

ஹரீஷ்

குழும விவாதத்தில்