Monday, February 23, 2015

செஞ்சுடர் விழி



ஜெ,

ஒரு ‘ஆபாசமான’ உச்சகட்ட அழகுள்ள கவிதை என்று 19 ஆம் அத்தியாயத்தைச் சொல்லமுடியும். வாசித்துத் தீராதது. அதற்கு இந்திய மரபில் உள்ள அர்த்தங்களெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நவீன இலக்கியத்திலே இதை எழுத ஒரு அழகியல்முறை இல்லை. நேரடியாக எழுதி கூசவைக்கலாம். ஆனால் இந்தவர்ணனைகள் எங்கோ செல்கின்றன. மனிதனை மிருகமாக்கி தூய்மைப்படுத்துகின்றன என்று தோன்றுகிறது


கரும்புகை எழுந்த செஞ்சுடர் விழி

இருகருஞ்செவிகளாடும் செம்மலர்சூடிய மத்தகம்

இருமரங்கள் ஏந்தி ஒருதேன்கூடு.

இரு தூண்கள் தழுவிப் பறக்கும கொடி.

செஞ்சிற்றலகு கூர்ந்த சிறுகுருவி அமர்ந்த கூடு.

புவிதிறந்தெழுந்த அனல்.

பூத்த மடல் திறந்தெழுந்த புனல்.

செம்மை சூடிய கருமுகில்.

வாய்க்குள் வாய்க்குள் வாயெனத் திறந்து குழவியை உண்ட செவ்விருள்

ஆனால் இந்த வரிதான் அதில் உச்சம். சொல்லிச் சொல்லி சொல்லமுடியாமல் நிறுத்திவிட்ட வரிபோலத் தோன்றியது இது

இங்குள்ளேன் என்னும் முகிழ். இங்குளதென்ன என்னும் இதழ்.

சாரங்கன்