Saturday, December 5, 2015

கிர்நார்



ஜெ

ரைவதமலை என்பது இன்றைக்குள்ள கிர்நார் என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். கிர்நார் பயணத்தை உங்கள் இணையதளத்தில் போய் வாசித்துப்பார்த்தேன். அற்புதமாக இருந்தது. மகத்தான பயணம் அது

அந்தப்பயணத்தில் உங்கள் முகத்தில் தெரியும் களைப்பையும் நிறைவையும் பார்த்தேன். தாடியுடன் அழகாக இருந்தீர்கள். தீவிரமான முகமாக தெரிந்தது. இந்த அத்தியாயத்துக்கான விதை அன்றைக்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்

ஒரு நாவல் என்பது எப்படியெல்லாம் உருவாகிறது என்று நினைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. எப்படியெல்லாம் அதன் விதைகல் மன\த்துக்குள்ளே போய் விதைக்கப்படுகின்றன. அதெல்லாம் எப்படி கற்பனையில் முளைத்து வருகின்றன

கிர்நாருக்கு நானும் ஒருமுறை போய் ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

எஸ் அரவிந்தன்