Tuesday, March 31, 2015

வேழத்தின் அடி



ஜெ,

நான் வெண்முரசிலே காத்திருந்த விஷயம் இதுதான். எந்த இடத்தில் எந்தச் சரியான புள்ளியில் திருதராஷ்டிரனின் மனம் மாறப்போகிறது? திருதராஷ்டிரர் தன் மகனை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை முன்னர் அவன் பிறந்தபோதே சொல்லிவிட்டார் ஆனால் அவர் அஸ்தினபுரியின் வேழம். ஒரு பெரிய தகப்பன். அவர் எப்படி மாற்ப்போகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒரு டிரமாட்டிக் ஆன தருணத்தில் அவரது மனசு வெளிப்படும் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லாமல் அது வெளிப்படும் இடம் மிகமிக நுணுக்கமகா இருந்தது. கண்ணுக்கேதெரியாமல் ஒரு சின்ன மற்றமாக அது வெளிப்பட்டது.அப்படியே அது பெருகி அவரை மாற்றிவிடுமென்பது நன்ரகாவே தெரிந்தது

அந்த சிறிய மாற்றம் வெளிப்படும் நுட்பமான இடம் மிக நிறைவளிப்பதாக இருந்தது. அப்படித்தான் அது நிகழும் என்று தெரிந்தது.

நன்றி ஜெ

சிவம்