Friday, March 20, 2015

பட்சியின் வானம்

 மகாபாரத இதிகாசத்தை நாவலாக முழுமையாக எழுத நினைத்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆரம்ப நூலாக எழுதிதொடங்கியிருக்கும் புத்தக‌ம்முதற்கனல். அந்த பெயரே ஒரு கவித்துவமாக இருக்கிறது. நாவலின் உள்ளே பல புதிய சொற்களும் கவித்துவமான வார்த்தைவாக்கிய, சொல்லாடல் என்று சிதறிக்கிடக்கும் எழுத்துப் பெருவெளியாக‌ விரிந்து கிடக்கிறது முதற்கனல். பெரும் கனவை நினைவுகூறும் பதபதைப்பும் சின்ன வயது நினைவுகளுடன் அவற்றை இணைக்க முயற்சிக்கும் ஒரு நிறைவும்கலையுடன்கூடிய‌அழகுணர்ச்சியும் கொண்டு சமவெளி மலர்கூட்டங்களின் நறுமணம் போல மேலேழுந்து வருகிறது.. அவரது உச்சமான விஷ்ணுபுரத்தை தாண்டி இப்போது மற்றொரு உச்சத்தை தொட்டிருக்கிறார் என்று சொல்லலாம். அடுத்த பாகங்கள் வெளிவந்து அதை உறுதிப்படுத்தும் என நினைக்கிறேன்.